×

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் பறக்கும் படையினரால் ரூ.168 கோடி பறிமுதல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணியில் 700க்கும் மேற்பட்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் சென்றால் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் காவலர்களுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ரூ.74 கோடி ரொக்க பணமும், மதுபான வகைகள் ரூ.3.9 கோடி, போதைப்பொருள் வகைகள் ரூ.78 லட்சம், தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.74 கோடி மற்றும் பரிசு பொருட்கள் ரூ.15 கோடி என கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை ரூ.168 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் பறக்கும் படையினரால் ரூ.168 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்